லோக்சபா தேர்தளில் நாங்கள் போட்டியிடப்போவதில்லை: மாயாவதி அறிவிப்பு!!

  •  நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் எதிரிக் கட்சிகளாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியும் இந்த மக்களவை தேர்தலில் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியில் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக்தளம் கட்சியும் அங்கம் வகிக்கிறது. தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என இந்த இரு கட்சிகளும் அறிவித்துள்ளன. எனினும், அமேதி, ரேபரேலி தொகுதிகளில் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் தான் போட்டியிட போவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி அறிவித்துள்ளார்.

author avatar
Srimahath

Leave a Comment