மே 24-ல் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு!

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிப்பு.

தமிழ்நாட்டில் தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24-ஆம் தேதி தொடங்குகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 25ம் தேதி நடைபெறுகிறது.

மேலும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு மே 26-ஆம் தேதி நடைபெறும் என தொடக்க கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுபோன்று, இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியத்துக்குள்) மே 29-ஆம் தேதி நடைபெறுகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்