சிறையில் இருந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை …!

வேலூர் சிறையில் இருந்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார்.
Image result for திருமுருகன் காந்தி
கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார். 2017இல் செப்டம்பரில் தடையை மீறி பேரணி, அரசுக்கு எதிராக பேசியதாக ராயப்பேட்டை போலீஸ் கைது செய்தது.அதுமட்டும் அல்லாமல் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டார் . இதன் பின்னர் திருமுருகன் காந்தி புழல் சிறையில் இருந்து வேலூர் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
சில நாட்களுக்கு முன்னதாக அவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவந்த நிலையில் 52 நாள் சிறைக்கு பின்  வேலூர் சிறையில் இருந்து  திருமுருகன் காந்தி விடுதலை செய்யப்பட்டார்.இவர் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment