மனநோயால் பதிக்கப்பட்ட மேக்ஸ்வெல்!

ஆஸ்திரேலிய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான மேக்ஸ்வெல், தனது அட்டகாசமான ஆட்டத்தால், உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே தன் வசப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், இவர்,தற்போது இலங்கை அணிக்கு எதிரான டி20 போட்டியில் விளையாடி  வந்த நிலையில், திடீரென தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தார். இதுகுறித்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், ‘‘மேக்ஸ்வேல்  மன அழுத்த பிரச்சினை காரணமாக  கிரிக்கெட்டில் இருந்து சில காலம் விலகி இருக்க உள்ளார். தனது பிரச்சினையிலிருந்து அவர் விரைவில் மீண்டு வந்து மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பார்” என விளக்கமளித்துள்ளது.
மேலும், மேக்ஸ்வெல்லுக்கு ஆஸ்திரேலிய அணியின் மனநல மருத்துவர் ஆலோசனைகள் வழங்கி உதவி அளிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.