கடந்த சில வாரங்களாக காய்ச்சல்கள் பரவிய வண்ணம் உள்ளது. இந்நிலையில் நேற்று மதுரையில் பன்றி காய்ச்சலால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 99 பேருக்கும், டெங்குவால் பாதிக்கப்பட்ட 6 பேருக்கும், பன்றிகாய்ச்சலால் பாதிக்கப்பட்ட 7 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு சிறுவன் பன்றி காய்ச்சலால் இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.