சரமாரியாக வாலிபர் வெட்டிக்கொலை..! 4 பேர் கைது

மணிமுத்தாறு அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

மணிமுத்தாறு அருகே இந்திரா காலனியை சேர்ந்தவர் பாலையா மகன் இசக்கிமுத்து இவர்க்கு வயது 20 திருமணம் ஆகவில்லை, கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் வேலைசெய்து வருகின்றார், இந்நிலையில் இவருடைய சகோதரர் பாலசுப்பிரமணிக்கும் அப்பகுதியில் உள்ள மகேந்திரம் என்றவர் மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இது குறித்து கல்லடைகுறிச்சி போலீசாரிடம் புகார் செய்யப்பட்டது, போலீசார் இரு தரப்பினரும் அழைத்து சமர படைத்தியுள்ளனர். இந்நிலையில் பாலசுப்பிரமணி வெளியூர் சென்றுள்ளார். நேற்று முன்தினம் 11 மணி அளவில் இசக்கி முத்து வீட்டில் வெளியில் இருந்து நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த பொழுது அங்கு வந்த மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்கள், இசைக்கி முத்துவை மடக்கி சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார்கள்.

இதில் சம்பவ இடத்தில இரத்த வெள்ளத்தில் கிடந்த இசக்கி முத்து உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைகாக அனுப்பிவைத்தனர், மேலும் கொலையாளிகளை முற்றிகையிட்டு போலீசார் மகேந்திரன் மற்றும் அவரது நண்பர்களை சகோதர்கள் உட்பட 4 பேரை கைது செய்தனர்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.