அடுத்த ஒரு மாதத்திற்கு மாஸ்க் கட்டாயம் – சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தால் கொரோனா பரவலை குறைக்க முடியும்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,872  ஆக அதிகரித்துள்ளது.  மேலும், 208 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், கொரோனா தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், அடுத்த ஒரு மாதத்திற்கு மக்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்தால் கொரோனா பரவலை குறைக்க முடியும் என்றும், கொரோனா எண்ணிக்கை அதிகரிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும், கொரோனா பாதிப்பு பகுதிகளில் தடுப்பை தாண்டி வெளியே வந்தால், வழக்கு பாதித்து  நேரிடும் என்றும் எச்சரிக்கை வொடுத்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.