#PriceHike:அனைத்து மாடல் கார்களின் விலை உயர்வு – மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

#PriceHike:அனைத்து மாடல் கார்களின் விலை உயர்வு – மாருதி சுசுகி நிறுவனம் அறிவிப்பு!

பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி,தனது அனைத்து  கார்களின் விலையை மாடல்களை பொருத்து 0.9 சதவீதம் முதல் 1.9  சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

தற்போது ஆல்டோ முதல் எஸ்-கிராஸ் வரையிலான பல்வேறு கார்களை விற்பனை செய்து வரும் நிறுவனம்,பல்வேறு உள்ளீட்டு செலவுகளின் அதிகரிப்பு காரணமாக விலை உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும்,இந்த புதிய விலை உயர்வு நேற்று (18 ஏப்ரல்) முதல் அமலுக்கு வந்துள்ளது.

இதனிடையே,கடந்த ஏப்ரல் 6 அன்று,மாருதி சுசுகி நிறுவனம் கூறுகையில்: “கடந்த ஆண்டில்,பல்வேறு உள்ளீட்டு செலவுகள் அதிகரித்ததால்,நிறுவனத்தின் வாகனங்களின் விலை தொடர்ந்து மோசமாகப் பாதிக்கப்பட்டது.எனவே,விலை உயர்வின் மூலம் கூடுதல் செலவினங்களின் சில பாதிப்பை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவது இன்றியமையாததாகி விட்டது’,என்று கூறியிருந்தது. இந்நிலையில்,தற்போது அனைத்து மாடல் கார்களின் விலையை நிறுவனம் உயர்த்தியுள்ளது.

உள்ளீடு செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு,ஏற்கனவே ஜனவரி 2021 முதல் மார்ச் 2022 வரை வாகன விலைகளை சுமார் 8.8 சதவீதம் மாருதி சுசுகி நிறுவனம் உயர்த்தியுள்ளது.

இதற்கிடையில்,கடந்த வாரம் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வாகனங்களின் விலையை 2.5 சதவீதம் அதிகரித்து ரூ.63,000 வரை விலையை உயர்த்தியது.அதைப்போல்,டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் ஏப்ரல் 1 முதல் அதன் மொத்த மாடல்களின் விலையை 4 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்களான ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ ஆகியவையும் சமீபத்தில் விலை உயர்வை அறிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube