#BREAKING: பதக்கத்தை உறுதி செய்த மாரியப்பன் தங்கவேலு சரத்குமார்,..!

உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார் இருவரும் பதக்கத்தை உறுதி செய்தனர். மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தில் உள்ளார். 

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது பாரா ஒலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் இதுவரை இந்திய வீரர் வீராங்கனைகள் 2 தங்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியா 5 பதக்கங்களை வென்றிருந்தது. அதில் 2 தங்கங்களும் அடக்கம்.

டோக்கியோ பாராலிம்பிக் ஆடவர் உயரம் தாண்டுதல் டி(63) போட்டி இன்று (ஆகஸ்ட் 31), இந்திய நேரப்படி மாலை 3.55 மணிக்கு தொடங்கியது. இந்த உயரம் தாண்டுதல்  போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார், வருண் சிங் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்நிலையில், உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு, சரத்குமார் இருவரும் பதக்கத்தை உறுதி செய்தனர். மாரியப்பன் தங்கவேலு 1.86 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தில் உள்ளார்.

மாரியப்பன் தங்கவேலு கடந்த 2016 ரியோ பாராலிம்பிக்கிலும் உயரம் தாண்டுதல் போட்டியில் பங்கேற்றிருந்தார். அதில், 1.89 மீட்டருக்கு உயரம் தாண்டி தங்கப்பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan