பிரிக்ஸ்-இல் சேர பல நாடுகள் விருப்பம்- தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர்.!

பிரிக்ஸ்-இல் சேர பல நாடுகள் விருப்பம்- தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர்.!

பிரிக்ஸ் அமைப்பில் சேர பல நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக, தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் எனும் பல நாடுகள் கூட்டமைப்பில் சேர்வதற்கு உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன என்று தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சர் நலேடி பண்டோர் கூறியுள்ளார். இது பன்முகத்தன்மையை வலுப்படுத்துதல், சீர்திருத்தத்தை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு உதவுதல் போன்ற அதன் மதிப்புகளில் இந்த பிரிக்ஸ் அமைப்பு  வலுவாக இருக்கிறது என்பதற்கு இது தெளிவான அறிகுறியாகும் என்று அவர் கூறினார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளைக் கொண்ட இந்த பிரிக்ஸ் பொருளாதாரக் குழு ஜூன் 16, 2009 இல் உருவாக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் முதல் பிரிக்ஸ் ஷெர்பா மற்றும் சௌஸ்-ஷெர்பா கூட்டத்தில் உரையாற்றும் போது  அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

author avatar
Muthu Kumar
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *