மீண்டும் 4வது இடத்திற்கு குழப்பம் ! மணீஷ் பாண்டேவிற்கு வாய்ப்பு !

உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 3 ஒரு நாள் போட்டி, 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதில் பும்ரா மற்றும் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடர் முடிந்ததும் தோனி ஓய்வு பெற்றுவிடுவார் என்று பல கருத்துக்கள் எழுந்தது. ஆனால் தோனி இதுகுறித்து மௌனம் சாதித்தார். ஆனால் தற்போது 2 மாதங்கள் மட்டும் ஓய்வு பெற்று இராணுவ பணியாற்றுவதாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் மீண்டும் 4வது இடத்திற்கு குழப்பம் ஏற்படுத்தியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே இந்திய அணிக்கு 4வது இடத்தில் பூர்த்திசெய்ய எந்த வீரர்களும் கிடைக்கவில்லை.

இந்த இடத்திற்கு சிறந்த வீரரான அம்பத்தி ராயுடு ஒரு சில மோசமான ஆட்டத்தால் உலகக்கோப்பையில் தேர்வு பெறவில்லை. அதனால் உலகக்கோப்பையில்  கே.எல் ராகுல், கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்பதால் மீண்டும் இந்த பிரச்சனை எழுந்துள்ளது.

தற்போது இந்திய ஏ அணிக்கு கேப்டனாக இருக்கும் மணிஸ் பாண்டே 4வது இடத்திற்கு தகுந்த வீரராவார். இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான தொடரில் விளையாடி வருகிறார். அந்த அணியுடனான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் மணிஸ் பாண்டே அபார சதமடித்ததால், இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என்று எதிரபார்க்கப்படுகிறது.

author avatar
Vidhusan