மகனுக்கு மருந்து வாங்க 2 நாட்கள் சைக்கிளில் பயணித்த தந்தை-நெகிழ்ச்சி சம்பவம்..!

கர்நாடகாவை சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் தனது மகனின் உடல்நலத்திற்காக மருந்து வாங்க 300 கி.மீ. சைக்கிளில் பயணித்த சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

ஆனந்த் என்பவர் மைசூருக்கு அருகில்  நரசிபூர் தாலுக்காவில் உள்ள கனிகன கோப்பலு என்ற இடத்தில் வசிக்கிறார். இவர் ஒரு கட்டிட வேலை பார்க்கும் கூலி தொழிலாளி. வறுமையில் குடும்பம் நடத்தும் இவரின் மகனுக்கு நரம்பு சம்பத்தப்பட்ட பாதிப்பு உள்ளது.  மைசூர் மருத்துவமனைகளில் குணமடையாததால் அவரது மகனை பெங்களூரில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகத்தில் மருத்துவம் பார்த்து வருகிறார். மேலும் இவரது மகனை இரு மாதங்களுக்கு ஒரு முறை நேரில் அழைத்து வர வேண்டும் என்றும் மகனுக்கு 18 வயதாகும் வரை மருந்துகளை ஒரு நாள் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர்.

இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் காரணமாக கர்நாடகாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. நாள் தவறாமல் மகன் மருந்து சாப்பிட வேண்டும் என்பதற்காக மைசூரில் உள்ள கடைகளில் கேட்டு பார்த்துவிட்டார். மருந்து எங்கும் கிடைக்காததால், மகனின் நலனுக்காக பெங்களூர் செல்ல சைக்கிளில் பயணித்தார். 2 நாட்கள் பயணம் செய்து பெங்களூரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சைக்கிளில் வெகுதூரம் பயணித்து வந்த இவரை பார்த்த மருத்துவர்கள் ஆச்சர்யத்தில் நெகிழ்ந்து போயினர். அதனால் ஆனந்தின் நிலையை பார்த்த மருத்துவர்கள் மகனுக்கு தேவையான மருந்துகளை கொடுத்து அனுப்பியதோடு மேலும் 1000 ருபாய் செலவுக்காக கொடுத்தனுப்பியுள்ளனர். மருந்தையும் பணத்தையும் பெற்றுக்கொண்டு மீண்டும் 2 நாள் பயணித்து வீட்டிற்கு வந்துள்ளார் ஆனந்த். மகனின் நலனுக்காக சைக்கிளில் 300 கி.மீ. பயணித்ததும் எனக்கு மகிழ்ச்சியே என்று தெரிவித்துள்ளார் ஆனந்த்.

Recent Posts

CSKvsGT : சதம் விளாசிய ஸ்டோய்னிஸ்… சென்னையை வீழ்த்தி லக்னோ திரில் வெற்றி..!

IPL2024:  லக்னோ அணி 19.3 ஓவரில் 4 விக்கெட்டைகளை இழந்து 213 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்று நடைபெற்ற ஐபிஎல் தொடரின்…

6 hours ago

ரச்சின் இன்னைக்கு டீம்ல இல்ல ..! டாஸ்ஸின் போது கெய்க்வாட் கூறியது இதுதான்!

Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…

9 hours ago

பிரதமர் மோடி மீது டெல்லி காவல் நிலையத்தில் புகார்!

PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர்  மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…

9 hours ago

அதிரடி லுக் .. அட்டகாசமான விலை! ரியல்மி களமிறக்கும் அடுத்த மொபைல் !!

Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…

9 hours ago

கில்லி படம் விக்ரம் பண்ண வேண்டியது! அவர் நடிக்க மறுத்த காரணம் இது தான்!

Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…

11 hours ago

கூகுள் பாதையை தேர்ந்தெடுத்த மெட்டா.! மார்க்கின் மாஸ்டர் பிளான்…

Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…

11 hours ago