பார்ட்டிக்காக பால் கேன்களில் சாராயம் கொண்டு சென்றவர் கைது!

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகின்ற நிலையில், தற்போது பல நாடுகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், உணவில்லாமல் தவிப்பவர்களை விட சாராயம்  இல்லாமல் தவிப்பவர்கள் தான் அதிகம் என சொல்ல வேண்டும். 

மது கிடைக்காததால் தற்கொலை செய்து உயிரை மாய்த்து கொள்ளும் அளவுக்கு சென்றுவிட்டார்கள். இந்நிலையில், டெல்லியில் உள்ள பாபு சவுத்திரி எனும் பால்காரன் தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக தனது பால் கேன்களில் மது பாட்டில்களை வைத்து சென்றுள்ளார்.

பால் அத்தியாவசியமான பொருள் போலீசார் கண்டுகொள்ளமாட்டார்கள் என நினைத்து நள்ளிரவில் இவர் கடத்தி சென்றுள்ளார். ஆனால், நள்ளிரவில் எதற்காக பால் என சந்தேகமடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். தப்பிக்க முயன்ற அவரது பால் கேன்களை சோதனை செய்ததில் அதில் 7 மது பாட்டில்கள் இருந்துள்ளது.

போலீசார் அந்த கேன்கள் முழுவதையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் இவருக்கு எப்படி மது கிடைத்தது என விசாரணை நடைபெற்றுக்கொண்டுள்ளது. 

author avatar
Rebekal