Breaking :மங்களூரு விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்த நபர் போலீசில் சரண்.!

  • கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பையில் வெடிகுண்டு கிடைத்தது .
  • இன்று பெங்களூர் காவல் நிலையத்தில் ஆதித்யா ராவ் என்பவர் போலீசாரிடம் சரண் அடைந்தார்.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம் கேட்பாரற்ற நிலையில் கருப்பு பை ஒன்று கிடந்தது. இதுகுறித்து பாதுகாப்பு பணியில் இருந்த  பாதுகாப்பு படையினர் மங்களூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு இருந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்துஅந்த பையை மீட்டு வெடிகுண்டு மீட்பு வாகனத்தில் வைத்து பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர்.

நேற்று மங்களூரு விமான நிலையம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் வெடிகுண்டை வைத்தது யார்..?என போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்த நிலையில் இன்று பெங்களூர் காவல் நிலையத்தில் ஆதித்யா ராவ் என்பவர் போலீசாரிடம் சரண் அடைந்தார்.

author avatar
murugan