டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மாவுடன் மம்தா நேரில் சந்திப்பு…!

5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகியோரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

நேற்று மாநில மந்திரிசபை கூட்டம் முடிந்ததும் கொல்கத்தாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சென்ற மம்தா பானர்ஜி விமானம் மூலமாக டெல்லி சென்றுள்ளார். இந்நிலையில் இன்று டெல்லியில் 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகியது.

மேலும், அதற்கு முன்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரையும் பிற்பகல் 2 மற்றும் 3 மணியளவில் அடுத்தடுத்து சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. இதனையடுத்து தற்போது மம்தா பானர்ஜி அவர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்களாகிய கமல்நாத் மற்றும் ஆனந்த் சர்மா ஆகிய இருவரையும் நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது அரசியல் நிலவரங்கள் மற்றும் கொரோனா பாராவல் உள்ளிட்டவை குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
Rebekal