“ஆய்வுக் கூட்டத்தை வேண்டுமென்றே மம்தா புறக்கணித்தார்” – மத்திய அரசு விளக்கம்..!

புயல் பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தை,மம்தா பானர்ஜி வேண்டுமென்றே புறக்கணித்தார் என்று மத்திய அரசு ஆதாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

கடந்த வாரத்தில் யாஸ் புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மம்தா பானர்ஜி முற்றிலும் தவறான அறிக்கைகளை வழங்கியதாகவும்,பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆய்வுக் கூட்டத்தை முதல்வர் மம்தா வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

  • அதாவது,பிரதமரின் அனுமதி பெற்றே,ஏற்கனவே திட்டமிட்ட பயணத்தை மேற்கொண்டதாக மம்தா தெரிவித்ததற்கு,பிரதமரிடம் அவர்,எந்த அனுமதியும் பெறவில்லை என்று ,மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • பிரதமரின் வருகை குறித்து தனக்கு தாமதமாக தகவல் அளிக்கப்பட்டது என்று மம்தா கூறியதற்கு பதிலளித்த மத்திய அரசு,புயல் வந்த பின்புதான்,அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய முடியும் என்று கூறியது.
  • பிரதமரின் மறுஆய்வில் கலந்து கொள்ள மம்தா பானர்ஜி முன்னதாக ஒப்புக் கொண்ட போதிலும்,தனது முன்னாள் உதவியாளராக இருந்து  பாஜக எம்எல்ஏ ஆக மாறிய சுவேண்டு ஆதிகாரி,மாநில எதிர்க்கட்சித் தலைவர் சார்பில் இந்த கூட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பார் என்பதை அறிந்த பின்னர்,மம்தா தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டார்,என்று அரசு தெரிவித்தது.
  • பிரதமரின் வருகைக்காக விமான நிலையத்தில் தன்னை காக்க வைத்ததாக மம்தா கூறியதற்கு,விமான நிலையத்துக்கு பிரதமர்,மதியம் 1:59 மணிக்கு வந்தார் என்றும்,ஆனால், மம்தா மதியம் 2:10 மணிக்குதான் வந்தார். இதை திரிணமுல் எம்.பி. சமூக வலைதளத்தில்
    பதிவிட்டுள்ளார் என்றும் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
  • பிரதமரின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்காக தனது ஹெலிகாப்டர், வானில், 20 நிமிடங்கள் சுற்றி வர நேர்ந்தது என்று மம்தா கூறினார்.அதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, பிரதமரின் பயணம் திட்டமிட்ட நேரப்படி அமைந்தது.மற்றவர்கள் முன்னதாக வந்தபோது, முதல்வர் ஏன் முன்னதாகவே வரவில்லை?,என்ற கேள்வி எழுப்பியது.
  • மேலும்,மம்தா,அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடனேயே, தலைமைச் செயலரை மத்திய அரசு பணிக்கு திருப்பி அழைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று கூறினார்.அதற்கு,தலைமைச் செயலர் ஒரு இந்திய சேவை அதிகாரி.ஆனால்,அவர்  புயல் பாதிப்பு குறித்து பிரதமருக்கு அவர் விளக்கத் தவறிவிட்டார். மேற்கு வங்க உயரதிகாரிகள் இல்லாததால், ஆய்வு கூட்டம் ரத்து செய்ய வேண்டியதாயிற்று.அதனால் தான், அவரை திரும்ப அழைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இவ்வாறு மம்தாவின் கருத்துகளுக்கு,மத்திய அரசு விளக்கம் அளித்து,மம்தா வேண்டுமென்று புறக்கணித்தார் என்றும் தெரிவித்துள்ளது.

Recent Posts

பட்ஜெட் விலையில் 8ஜிபி ரேம்..6000mAh பேட்டரி..கலக்கும் சாம்சங் கேலக்ஸி F15 ஸ்மார்ட் போன்.!

Samsung Galaxy F15: சாம்சங் நிறுவனம் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F15 5ஜி போனின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு வந்துள்ளது. இது Flipkart…

29 mins ago

‘பவர்ப்ளேல விக்கெட் எடுக்க கத்துக்கணும்’- சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் !

Ruturaj Gaikwad : நேற்றைய போட்டியில் தோல்வியடைந்த பிறகு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் பேசி இருந்தார். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் லக்னோ அணியும்,சென்னை அணியும்…

39 mins ago

கோவை சரளாவுக்கு கட்டு கட்டாக பணம் கொடுத்த எம்.ஜி.ஆர்! காரணம் என்ன தெரியுமா?

M.G.Ramachandran : கோவை சரளாவின் சிறிய வயதில் எம்.ஜி.ஆர் அவருக்கு பணம் ரீதியாக பெரிய உதவியை செய்துள்ளார். எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்த காலத்தில் எந்த அளவிற்கு உதவிகளை…

56 mins ago

நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!

Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில்…

1 hour ago

21 மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்! எந்த மாநிலத்தில் அதிக வாக்கு சதவீதம் அதிகம்?

Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…

1 hour ago

ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க! விஜய் ஆண்டனி வேதனை!

Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…

2 hours ago