மெகா ஹிட் படத்திலிருந்து விலகிய மக்கள் செல்வன்.!காரணம் என்ன தெரியுமா .?

விஜய் சேதுபதி, 5 மொழிகளில் உருவாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலிருந்து கால்ஷீட் பிரச்சினை காரணமாக விலகியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்திலும் வில்லனாக நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். அதனையடுத்து இந்தியில் லால் சிங் சத்தா என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியருடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.

அதனையடுத்து சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியை அணுகியதாக கூறப்படுகிறது. இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் சேதுபதி கூறியதாவது, கால்ஷீட் பிரச்சினைகள் காரணமாக புஷ்பா படத்திலிருந்து விலகியதாகவும், புஷ்பா ஒரு நல்ல கதை என்றும், ஆனால் என்னால் தான் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று வருந்தியுள்ளார்.