வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்யுங்கள் – தலைமை காஜி

ரம்ஜான்  சிறப்பு தொழுகைக்காக பள்ளிவாசல் செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்யுமாறும் தலைமை காஜி தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும்  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதனால், வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மதத்தினரும்,  தங்களது வீட்டில் இருந்தபடியே வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், ஊரடங்கு இம்மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு தலைமை காஜி சலாஹுதீன் முகமது அயூப், ரம்ஜான்  சிறப்பு தொழுகைக்காக பள்ளிவாசல் செல்ல வேண்டாம் என்றும், வீட்டிலேயே நோன்பிருந்து தொழுகை செய்யுமாறும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.