சிவகாசிக்கு ஒரு கால் செய்துவிட்டு ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்கள் – தங்கபாண்டியன், திமுக

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணப்பெட்டியுடன் தொகுதிக்குள் வந்துள்ளார் என்று திமுக வேட்பாளர் தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட தொகுதி எம்எல்ஏவும், திமுக வேட்பாளரான தங்கபாண்டியன், அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பணப்பெட்டியுடன் தொகுதிக்குள் வந்திருப்பதாகவும், பணத்தை பெற்று கொண்டு வெறும் பெட்டியுடன் அமைச்சரை திருப்பி அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவகாசிக்கு ஒரு கால் செய்துவிட்டு அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்கள் என்றும் யார் ஒருவர் ராஜேந்திர பாலாஜிக்கு ஓட்டு போடுங்க என்று சொல்லிட்டா, நான் அரசியலை விட்டு கூட போக கூட தயாராக இருக்கிறேன். ஆனால் அவர் போவாரா? என்று மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனிடையே நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வாக்காளர்கள் அனைவரும் நமக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். அந்த வாக்குகளை கொண்டு சேர்கின்ற பணி நம்முடைய பணி என கூறியிருந்தார்.

உங்களுக்கு எதை செய்யவேண்டுமோ, அதை செய்கின்ற வேலையை நான் இங்குள்ள நிர்வாகிகளை அழைத்து பேசி, அதற்கான ஏற்பாடு செய்திருப்பதாகவும், அதிமுக தொண்டர்களுக்கு இன்று தொடங்கி வரும் 4ம் தேதி வரை சில முக்கிய பணிகள் உள்ளன என்றும் அவற்றை சிறப்பாக செய்யவேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்