ஒரு வாரத்தில் 50 ஆயிரம் உணவுப்பொட்டலங்களை அளித்த மஹிந்திரா நிறுவனம்.!

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிப்பதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. தினக்கூலி தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது தினசரி வாழ்வை நகருத்துவதற்கே மிகவும் கஷ்டப்படுகின்றனர். 

இதனை பொருட்டு, பலர் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். அரசும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. 

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் எம்.டி பவன் கோயங்கா தனது டிவிட்டர் பக்கத்தில், ‘ தங்கள் நிறுவனம் மூலம், ஒரு வாரத்தில் 10 இடங்களில் 50,000 உணவு பொட்டலங்களை தங்கள் சமூக சமையலறை மூலம் அளித்துள்ளோம். 10,000 பேருக்கு சமையல் செய்ய அத்தியாவசிய பொருட்களை அளித்துள்ளோம். வெளிமாநில தொழிலாளர்கள் சமையல் செய்ய இடம் அமைத்து கொடுத்துள்ளோம். ஒரு நாளைக்கு 10,000 சாப்பாடு பொட்டலங்களை தினக்கூலி தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளோம்.’ என ப

திவிட்டுள்ளார். 

 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.