தங்க மங்கை அவனிக்கு மஹிந்திரா கார் நிறுவனம் அறிவித்த பிரத்யேக பரிசு..!

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற அவனி லெகாராவுக்கு மஹிந்திரா கார் நிறுவனம் பிரத்யேக கார் ஒன்றை பரிசாக அறிவித்துள்ளது.

இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில் இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மாற்றுத்திறனாளிகளுக்கான 16-வது  பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்த போட்டியில்  இன்று நடைபெற்ற மகளீர் 10 மீட்டர் ஏர்ரைபிள் துப்பாக்கி சுடுதல் இறுதிப்போட்டியில், இந்தியாவை சேர்ந்த வீராங்கனை அவனி லெகாரா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே பாராலிம்பிக்கில் 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என 3 பதக்கங்களை இந்தியா பெற்றுள்ள நிலையில், நான்காவதாக தங்கப்பதக்கத்தை பெற்றுள்ளது.

பாராலிம்பிக்கில் இந்தியாவுக்கு இது முதல் தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. அவனி லெகாரா (19) ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர். இவர் இந்த போட்டியில் 249.6 புள்ளிகள் பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே படைத்துள்ள உலக சாதனையை சமன் செய்துள்ளார்.

தங்கம் வென்ற அவனிக்கு பலரும் வாழ்த்துக்களையும் பரிசுகளையும் அறிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல கார் நிறுவனமான மஹிந்திரா, தற்போது அவனிக்கு பரிசு ஒன்றை அறிவித்துள்ளது. இன்னும் விற்பனைக்கு வராத மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள எஸ்யுவி காரின் முதல் காரை இவருக்கு பரிசாக அறிவித்துள்ளது.