இலங்கை பிரதமராக பதவியேற்று கொண்டார் மகிந்த ராஜபக்சே

பிரதமராக பதவியேற்று கொண்டார் மகிந்த ராஜபக்சே.

இலங்கையில்  கடந்த சில தினங்களுக்கு முன்பதாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த தேர்தலில், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், ராஜபக்சேவின்  பொது ஜனபெரமுன கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜபக்சேவின் கட்சி 145 இடங்களில் வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற நிலையில்  மகிந்தா ராஜபக்சே இன்று 4 ஆவது முறையாக இலங்கையின் பிரதமராக பதவியேற்றார். இலங்கையின் அதிபரும் ராஜபக்சேவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்சே முன்னிலையில் ராஜபக்சே பதவி பிரமாணம் செய்து கொண்டார்.