தந்தை பிறந்தநாளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய மகேஷ் பாபு..!

தந்தை பிறந்தநாளில் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிய மகேஷ் பாபு..!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் தந்தை மற்றும்  நடிகருமான கிருஷ்ணா அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்திலுள்ள புர்ரிபாலம் கிராம மக்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் தடுப்பூசியை மருத்துவமனைகளுடன் இணைந்து நடிகர் மகேஷ் பாபு வழங்கியுள்ளார்.

தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கொரோனாவை வெல்லும் பேராயுதமாக  தடுப்பூசி தான் உள்ளது.

இந்த நிலையில், நடிகர் மகேஷ் பாபு கிராம மக்களும் சொந்த செலவில் தடுப்பூசியை வழங்கியுள்ளார். மேலும்மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொண்டார்கள். இதனை, மகேஷ் பாபு பெருமையுடன் தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube