அதிர்ச்சி ! மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 59,907 பேருக்கு கொரோனா;322 பேர் பலி

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிராவில் 59,907 பேருக்கு புதிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது வரை மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,73,261 ஆக உயர்ந்துள்ளது ,நேற்று மட்டும் 322 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

இதனால் மாநிலத்தின் இறப்பு எண்ணிக்கை 56,652 ஆக உயர்ந்துள்ளது.தற்பொழுது செயலில் உள்ள கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,01,559 ஆகவும், இதுவரை கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 26,13,627 ஆக உயர்ந்துள்ளது.

author avatar
Dinasuvadu desk