மகாராஷ்டிராவில் வெள்ளம் அதிகம் பாதித்த பகுதியான ராய்கட்டில் உள்ள தலாய் கிராமத்தில் முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. எனவே பல இடங்களில் வெள்ளப்பெருக்கு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், நிலச்சரிவு ஏற்பட்டு உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டமான ராய்கட்டில் உள்ள தலாய் எனும் கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவின் போது 36 வீடுகள் மீது பாறைகள் விழுந்ததில், 47 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 40 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இதுவரை மகாராஷ்டிராவில் 136 பேர் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தின் முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் ராய்கட்டில் உள்ள தலாய் கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…