மகாலட்சுமி விரைவு ரயிலில் இருந்த 700 பயணிகள் மீட்பு

கடந்த சில நாட்களாக மகாராஷ்டிரா மாநிலம்  மும்பையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல  பகுதிகளில்  மழை நீர் தேங்கி உள்ளது.ரயில் மற்றும் சாலை போக்குவரத்தும் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளது.  மழை வெள்ளத்தால்  பதல்பூரில் மகாலட்சுமி எக்ஸ்பிரஸ் ரயில் வெள்ளத்தில் சிக்கியுள்ளது. இதில் இருந்த சுமார்  700-க்கும்  மேற்பட்ட பயணிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது .

இந்நிலையில் வெள்ளப்பகுதியில் சிக்கிய மகாலட்சுமி விரைவு ரயிலில் இருந்த 700 பயணிகள் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் பத்திரமாக மீட்கப்பட்டனர்.