கும்பமேளா வுக்கு வந்த மகா நிர்வாணி அகாரா தலைவர் கபில் தேவ் கொரோனாவுக்கு பலி

மகா நிர்வாணி அகாரா தலைவர் கபில் தேவ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் ருத்திரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கும்பமேளா ஒரு மாதத்திற்கு நடக்கிறது.

இதில் பங்கேற்க வந்த மகா நிர்வாணி அகாரா தலைவர் கபில் தேவ் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார்.கும்பமேளா நடக்கும் இடத்தில்  மட்டும் ஏப்ரல் 10 முதல் 14 வரை 1,701 பக்தர்கள் வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

இந்த நிகழ்வால் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் நிலையிலும், உத்தரகண்ட் அரசாங்கத்தின் அதிகாரிகள் புதன்கிழமை அதைக் குறைப்பதற்கான வாய்ப்பை நிராகரித்தனர். இது ஏப்ரல் 30 வரை தொடரும் என்று தெரிவித்துள்ளனர்.

author avatar
Dinasuvadu desk