மகள் இறந்த துக்கம் தாங்காமல் விஷம் அருந்திய தந்தை….!!!

குமரி மாவட்டம் கண்டன்விளை பள்ளிசால்விலையை சேர்த்தவர் தங்கவேல் (45). இவருக்கு ஒரு மகனும், மகளும் இருந்தனர்.இந்நிலையில் கடந்த வருடம் அவரது மகள் உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் மனம் உடைந்த நிலையில் இருந்த தங்கவேல், இந்த சம்பவம் நடந்து சில நாட்களாக யாருடனும் பேசாமல் இருந்துள்ளார். இதனையடுத்து அவரது உறவினர் ஆறுதல் சொல்லி தேற்றி உள்ளனர். இதனையடுத்து இந்த வருடம் அவரது மகள் இறந்த தினத்தன்று வெளியில் சென்ற தங்கவேல் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

தங்கவேல் உறவினர்கள் அவரை தேடியுள்ளனர்.  இந்நிலையில் அவர் விஷம் குடித்துவிட்டு அவரது மகள் கல்லறையில் சடலமாக கிடந்துள்ளார். போலீசார் அவரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment