மதுரையில் பயங்கரம்! கர்ப்பிணி பெண்ணிற்கு சரமாரியாக அரிவாள் வெட்டு! கணவர் மற்றும் நண்பர்கள் கைது!

மதுரை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்ணை வீடு புகுந்து அரிவாளால் வெட்டியதன் பெயரில் முதல் கணவர் மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

மதுரை, உசிலமபட்டியில் உள்ள செக்கானுராணி எனும் பகுதியினை சேர்ந்த அம்சத் என்பவர் தனது முதல் கணவர் வடிவேலுவை பிரிந்து மதன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் முறைப்படி திருமணம் செய்துகொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகிறது.

இந்நிலையில் மதனும், அம்சத்தும் வீட்டில் இருந்த போது திடீரென ஒரு கும்பல் வீடு புகுந்து அம்சத்தை சரமாரியாக வெட்டி உள்ளனர். தடுக்க வந்த மதனையும் தாக்கியுள்ளனர். இதில் அம்சத் சம்பவ இடத்திலேயே பலியானார். மதன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார்.

இது தொடர்பாக முதல் கணவர்வடிவேலு மற்றும் அவரது நண்பர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.