மதுரையில் அலட்சியத்தால் சடலங்கள் மாற்றி ஒப்படைக்கப்பட்டு மயானம் வரை கொண்டுச் செல்லப்பட்ட அதிர்ச்சி!

மதுரை மாவட்டம் பொத்தாம்பட்டியைச் சேர்ந்த ராமர் என்பவரின் மனைவி கற்பகச் செல்வி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தீக்குளித்தார். ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
அதேபோல், மதுரை புது தாமரைப்பட்டியைச் சேர்ந்த அன்னலட்சுமி சாலை விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது சடலம் ராஜாஜி அரசு மருத்துவ மனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.
பிரேத பரிசோதனைக்குப் பின், மருத்துவமனை ஊழியர்கள் அன்னலட்சுமி உடலுக்குப் பதில் கற்பகச் செல்வி உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனை அறியாத அன்னலட்சுமி உறவினர்கள் அந்த சடலத்தை இறுதிச் சடங்கு செய்வதற்காக மயானம் வரை எடுத்துச் சென்றனர்.
அங்கு முகத்தை திறந்து பார்த்தபோதுதான் அன்னலட்சுமி உடலுக்குப் பதில் வேறு உடல் அளிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிணத்துடன் ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு  திரும்பிய உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீசார் தலையிட்டு, அன்னலட்சுமி உறவினர்களை சமாதானப்படுத்தினர். தீக்குளித்து இறந்த கற்பகச் செல்வியின் உடலைத் திரும்பப் பெற்றுக் கொண்டு, சாலை விபத்தில் இறந்த அன்னலட்சுமியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தன….
source: dinasuvadu.com

Leave a Comment