நிபா வைரஸ் பரவல் முன்னெச்சரிக்கையாக தனி வார்டு அமைத்துள்ள மதுரை அரசு மருத்துவமனை.
கேரளாவில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்ததை தொடர்ந்து, அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அனைத்து மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் நீபா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிறப்பு வார்டு அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி மதுரையில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனிமைப்படுத்தும் பகுதி சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை எச்ஓடி மருத்துவரான டாக்டர் நடராஜன் கூறுகையில் தற்போது எங்களிடம் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை. ஆனால் இந்த வைரஸை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும், வைரசால் பாதிக்கப்படுவோரை தனிமைப்படுத்த 20- படுக்கைகளை கொண்ட சிறப்பு வார்டை ஒதுக்கி உள்ளோம் என்றும், அனைத்து படுகைகளிலும் மானிட்டர், வென்டிலேட்டர் மற்றும் ஆக்சிஜன் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நிப்பா வைரஸ் அறிகுறிகள் இதுகுறித்து கூறுகையில், இது வைரஸ் தொற்று என்று அழைக்கப்படுகிறது. எனவே இது காய்ச்சல், உடல் வலி, மூக்கு ஒழுகுதல் போன்ற அறிகுறிகளாக வெளிப்படும். இந்த வைரஸ் மத்திய நரம்பு மண்டல அமைப்பு அதிகமாக பாதிக்கிறது என்று தெரிவித்துள்ளார். இது பல மொட்டுகள், பூனைகள், நாய்கள் மற்றும் வீட்டு பன்றிகளிடம் இருந்து பரவுகிறது. மனிதனுக்கு மனிதன் பரவக்கூடிய சக்தி கொண்டது என்ற தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…
Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…
ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…
Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…
Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…
Rishabh Pant : ரிஷப் பண்ட் சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…