மதுரையில் விவசாயி அடித்து கொலை! மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே  விவசாயம் செய்து வருகிறார் பால்சாமி. இவருக்கு பாப்பம்மாள் என்கிற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் பிள்ளையும் உள்ளார்கள். இவர் தனது நிலத்தில் விவசாயம் செய்து செய்து வந்துள்ளார்.  மற்ற நேரங்களில் தன் வீடு ஆடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி போவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நேற்று ஆடு மேய்த்து வீட்டு இரவு ஆடுகளுக்கு காவலாய் ஆட்டு பட்டியில் படுத்து உறங்கியுள்ளார். இன்று காலை அவர், தலையில் பலமாக அடிபட்டு இறந்து கிடந்த்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊர்மக்கள், போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் பால்சாமி எப்படி இறந்தார், தடயம் ஏதேனும் இருக்கிறதா என ஆராய்ந்து வருகின்றனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.