மதுரை, திண்டுக்கல்லில் வருமான வரித்துறை சோதனை!

மதுரை, திண்டுக்கல்லில் வருமான வரித்துறை சோதனை!

Income tax department

மதுரை, திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை சோதனை.

தமிழகத்தில் சென்னை, தேனி, திருச்சி, பழனி உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் வீடுகளில் சோதனை நடைபெறுவதாக கூறப்பட்டது. இந்த சோதனையின் போது கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரை, திண்டுக்கல்லில் உள்ள வடமலையான் மருத்துவமனையில் வருமான வரித்துறை அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வடமலையான் மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளாக முறையான வருமான வரி செலுத்தவில்லை என புகார் எழுந்த நிலையில், சோதனை நடைபெற்று வருகிறது. வடமலையான் மருத்துவமனையில் உள்ள ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube