மதுரையில் 4 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர தடை!

சீனாவை தொடர்ந்து பல நாடுகளில் கொரோனா வைரஸ் நோயானது பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  தற்போது இதன் பாதிப்பு இந்தியாவிலும் பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், மதுரையில், 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, நரிமேடு, தபால் தந்தி  நகர் பகுதிகளில் 4 நாட்கள் பொதுமக்கள் வெளியே வர தடை விதித்து மாவட்ட நிர்வாகம் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.