மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு…! 49 பேர் காயம்…!!!

மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில், 49 பேர் காயமடைந்துள்ளனர். 

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி மிக கோலாகலமாக நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட காளையர்கள் கலந்து கொண்டு காளைகளை அடக்குவதில் மிக உற்சாகமாக கலந்து கொண்டனர்.

இந்நிலையில், காளைகள் முட்டியதில், 49 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதில் 14 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 7-வது சுற்று நிறைவடைந்து இறுதிச்சுற்று நடைபெற்று வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment