த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க கோரிய வழக்கு : தேர்தல் ஆணையம் முடிவை தெரிவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.

த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னத்தை நிரந்தரமாக ஒதுக்க கோரி ஜி.கே.வாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.அதில்,  த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்குவது தொடர்பாக ஜூலை 18-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்க வேண்டும் என்று  தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளளது.