மத்திய பிரதேசத்தை சேர்ந்த 30 வயது பெண் போலீஸ் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார், இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள நீமட்ச் எனும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வரக்கூடிய 30 வயதுடைய பெண் போலீஸ் ஒருவருக்கும், அப்பகுதியில் வசித்து வரக்கூடிய ஒரு நபருக்கும் இடையே பேஸ்புக் மூலமாக கடந்த ஏப்ரல் மாதம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் சமூக வலைதளங்கள் மூலமாக தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
இதனையடுத்து அந்த நபர் தனது சகோதரன் பிறந்தநாள் எனக்கூறி பிறந்தநாள் விழாவில் பங்கேற்குமாறு பெண் போலீசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று அந்த பெண் போலீஸ் பிறந்த நாள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்ததும், அந்த நபர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பெண் போலீஸ் ஏட்டை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
மேலும் இதனை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வெளியில் கூறினால் கொலை செய்து விடுவேன் எனவும் அந்த நபர் மிரட்டியுள்ளார். இதனையடுத்து அந்த பெண் போலீஸ் கடந்த 13 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்ததுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த 3 பேர் மற்றும் அந்த நபரது தாயார் உட்பட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கியமான குற்றவாளியாகிய பெண் போலீஸின் நண்பன் மற்றும் அவரது தாயார் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Rutruaj Gaikwad : இன்றைய போட்டியில் வழக்கமாக களமிறங்கும் ரச்சின் ரவீந்திரா இடம்பெறாததற்கு ருதுராஜ் காரணம் கூறி இருந்தார். ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் சென்னை அணியும், லக்னோ…
PM Modi : பிரச்சாரத்தின் போது வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் மோடி பேசியதாக கூறி அவர் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் பிருந்தா காரத்…
Realme Narzo 70 5G : ரியல்மி நிறுவனம் தனது அடுத்த மொபைலான ரியல்மி நார்ஸோ 70 5G மற்றும் ரியல்மி நார்ஸோ 70x 5G என்ற இரு…
Ghilli : கில்லி படத்தில் விக்ரம் நடிக்க மறுத்த காரணம் குறித்த தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. இயக்குனர் தரணி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான…
Meta Horizon OS : மெட்டா நிறுவனம் உருவாகியுள்ள ஹரிசான் இயங்குதளத்தை VR ஹெட்செட்களில் மற்ற நிறுவனங்களும் பயன்படுத்தும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. மெட்டா நிறுவனர் மார்க்…
Morne Morkel : லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளரான மோர்னே மோர்க்கல் மாயங்க் யாதவின் உடற்தகுதியை குறித்து செய்தியாளர்களிடம் பேசி இருக்கிறார். இந்த ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் …