மாநாடு மெகா ஹிட்.! வட இந்தியாவில் நிரம்பி வழிந்த திரையரங்கங்கள்.! போன் போட்டு பாராட்டிய அட்லீ.!

மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருந்த அட்லீ, மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்களின் கூட்டத்தை பார்த்ததும் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து பாராட்டியுள்ளார்.

ஆத்மன் சிலம்பரசன் நடித்து வெங்கட் பிரபு இயக்கி கடந்தவாரம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மாநாடு. ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 8 நாட்கள் ஆகியும் அதன் தாக்கம் இன்னும் ரசிகர்களிடம் இருந்து இன்னும் விலகவில்லை.

இப்படம் திரையிட்ட அனைத்து இடங்களிலும் பெரும் லாபத்தை ஈட்டி வருகிறது. முதல் 3 நாளிலேயே பெரும்பாலான இடங்களில் போட்ட பணம் திரும்பி வந்துவிட்டதாம். அதற்கடுத்து வருவதெல்லாம் லாபம் மட்டும்தானாம்.

தென் இந்தியாவில் இந்த நிலைமை என்றால் வட இந்தியாவிலேயும் இதே நிலைமை தானாம். அங்கும் தியேட்டர்கள் ரசிகர்களால் நிரம்பி வழிகின்றதாம். அதனை நேரில் பார்த்த சாட்சி நம்ம இயக்குனர் அட்லீ தானாம். அட்லீ தற்போது மும்பையில் ஷாருக்கான் பட ஷூட்டிங்கில் இருக்கிறார்.

அவர் அங்கு மாநாடு படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு ரசிகர்கள் கூட்டத்தை கண்டு மிரண்டுள்ளார். சந்தோஷத்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு போன் செய்து படம் பெரிய ஹிட் ஆகியுள்ளது என வாழ்த்து கூறியுள்ளாராம்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.