#BREAKING : மீண்டும் ஆட்சியமைக்க உள்ள ஆம் ஆத்மி ! டெல்லி சட்டப்பேரவையைக் கலைத்த துணை நிலை ஆளுநர்

டெல்லி மாநிலத்தின் நடப்பு சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு  பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 8-ஆம் தேதி நடைபெற்றது.டெல்லியில் காங்கிரஸ் ,ஆம் ஆத்மி மற்றும் பாஜக ஆகிய கட்சிகளிடையே போட்டி நிலவியது.வாக்கு பதிவு  அனைத்தும் முடிவு பெற்றது.62.59% வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சியே முன்னிலை வகித்து வருகிறது.

இந்நிலையில் ஆம் ஆத்மி 3வது முறையாக ஆட்சியை பிடிக்க உள்ளதால் டெல்லி மாநிலத்தின் நடப்பு சட்டப்பேரவையை கலைத்து துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.