#IPL2022: டாஸ் வென்ற லக்னோ.. வெற்றிபெறுமா ராஜஸ்தான் அணி?

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதவுள்ள நிலையில், இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெறும் 20-வது போட்டியில் மயங்க் அகர்வால் தலைமையிலான கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கவுள்ள இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

விளையாடும் வீரர்கள்:

ராஜஸ்தான் அணி:

ஜோஸ் பட்லர், ரஸ்ஸி வான் டெர் டுசென், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), ஷிம்ரன் ஹெட்மயர், ரியான் பராக், குல்தீப் சென், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

கே.எல்.ராகுல் (கேப்டன்), குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்ப கவுதம், துஷ்மந்த சமீரா, ரவி பிஷ்னோய், அவேஷ் கான் ஆகியோர் விளையாடவுள்ளனர்.