இந்தியாவில் கடந்த 24 மணி 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி 40 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு..!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இறப்பு எண்ணிக்கை 350 ஆக பதிவாகியுள்ளது, இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,27,68,880 ஆக உள்ளது.

  • கடந்த 24 மணி நேரத்தில் 30,941 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது நேற்றைய பாதிப்பை விட 11,968 குறைவு. கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 3,27,68,880 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் கடந்த 24 மணி நேரத்தில் இறப்பு எண்ணிக்கை 350 ஆக பதிவாகியுள்ளது. இதுவரை இந்தியாவில் 4,38,560 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • தொற்றில் இருந்து ஒரே நாளில் 36,275 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 3,19,59,680 ஆக உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 3,70,640 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
  • நாடு முழுவதும் இதுவரை 64,05,28,644 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில், 59,62,286 பேருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube