காதலாவது கடலெண்ணெய்யாவது ஐஸ்வர்யா மேனன் ஓபன் டாக்…!

காதலாவது கடலெண்ணெய்யாவது ஐஸ்வர்யா மேனன் ஓபன் டாக்…!

ஆதிக்கும் ஐஸ்வர்யா மேனனிற்கும் காதல் இருப்பதாக செய்திகள் பரவிவருவதால் தற்போது இதற்கு ஐஸ்வர்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில் வெளியான காதல் செய்வது எப்படி என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து ஆப்பிள் பெண்ணே, வீரா போண்ற படங்களில் நடித்தார். அதற்கு பிறகு இயக்குனர் ரானா இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான நான் சிரித்தால் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்களுக் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதற்கு பிறகு தனது சமூக வலைதளபக்கங்களில் தான் எடுக்கும் அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் நடிகர் ஆதிக்கும் ஐஸ்வர்யா மேனனிற்கும் காதல் இருப்பதாக கூறிவந்த நிலையில், அதற்க்கான விளக்கத்தை ஐஸ்வர்யா மேனன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “படத்தில் எனக்கும் அவருக்கும் காதல் பத்திக்கும் ஆனால் நிஜத்தில் அவர் எனக்கு நெருக்கமான நல்ல நண்பர். மற்றபடி வேறொன்றும் இல்லை காதலாவது கடலெண்ணெய்யாவது என்று கூறியுள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.
Join our channel google news Youtube