காதலனின் வெறிச்செயல்.! தன்னை கண்டுகொள்ளாத 31 முறை கத்தியால் குத்தி கொலை.!

காதலனின் வெறிச்செயல்.! தன்னை கண்டுகொள்ளாத 31 முறை கத்தியால் குத்தி கொலை.!

  • கண்ணூரை சார்ந்த ஷாஜிலா என்ற பெண்ணுக்கு இவர் வீட்டின் அருகில் இருக்கும் அனிஷ் குட்டி உடன் தொடர்ப்பு இருந்து உள்ளது.
  • ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்ளாமல் இருந்ததால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை 31 முறை கத்தியால் குத்திக் கொலைசெய்தார்.

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர்  பகுதியை சேர்ந்தவர் ஷாஜிலா( 40) . இவர் கடந்த புதன்கிழமை தனது மகளை பள்ளியில் விட்டு விட்டு வீடு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது ஷாஜிலாவின் வீட்டின் அருகில் வசிக்கும் அனிஷ் குட்டி( 32) என்பவர் பைக்கில் வந்து உள்ளார். அப்போது ஷாஜிலாவை வழியில் மறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

தகராறில் ஆத்திரமடைந்த அனிஷ்குட்டி மறைத்து வைத்து இருந்த கத்தியை வைத்து  ஷாஜிலாவின் மார்பு, வயிறு மற்றும் கழுத்து ஆகியவற்றில் 31 முறை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த  ஷாஜிலா சம்பவ இடத்திலேயே இறந்தார்.

பின்னர்  போலீசார் அனிஷ்குட்டியை கைது செய்தனர். இது குறித்து போலீஸ் கூறுகையில் ,ஷாஜிலாவுக்கும், அனிஷ் குட்டிக்கும் சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகவும் , ஷாஜிலா சில நாட்களாக அனிஷ் குட்டியை கண்டுகொள்ளாமல் இருந்து உள்ளார். இதனால் கோபம் அடைந்த அனிஷ் குட்டி ஷாஜிலாவை கத்தியால் குத்திக் கொலை செய்ததாக போலீசார் கூறினர்.

author avatar
murugan
Join our channel google news Youtube