காதலித்த காதலியின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன்..!காதல் பின்னனி

  • திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காதலி
  • காதலின் அந்தரங்க புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்ட காதலன் 

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தை சேர்ந்தவர் கலையரசன் இவர்  கடலூர் மாவட்டத்தில் உள்ள வண்டிப்பாளையத்தில் தனது சகோதரி வீட்டில் தங்கி செல்போன் கடையில் வேலை பார்த்து வருகிறார்.இதே கடையில் வேலை பார்த்து வரும் இளம்பெண்ணும் கலையரசனும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அந்த பெண்ணின் பெற்றோர் அவருக்கு வேறொரு ஒருவருடன் திருமணம் செய்ய முடிவெடுத்து அதற்கான வேலையில் இறங்கியதாக சொல்லப்படுகிறது.தான் காதலித்த கலையரசனுடனான தொடர்பை அந்த பெண் துண்டிவிட்டார்.இதனால் ஆத்திரம் அடைந்த கலையரசன் காதலியின் அந்தரங்க புகைப்படங்களை எல்லாத்தையும் பேஸ்புக்கில் வெளிட்டார். இந்த புகைப்படங்களை கண்டு அதிர்ந்த அப்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் கலையரசனை தற்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
kavitha