திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் காதலி மிரட்டியதால் காதலன் தற்கொலை..!

திருமணம் நிச்சயிக்கப்பட்ட பின் காதலி மிரட்டியதால் காதலன் தற்கொலை..!

  • திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வலியுறுத்தல்.
  • மணிகண்டனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில் அந்த ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார்.

அதே மாவட்டத்தில் அம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டனும் அவரது காதலியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சில நாட்கள் கழித்து மணிகண்டனுக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. நிச்சயம் செய்த பெண்ணுடன் மணிகண்டன் வெளியே சென்று வந்துள்ளார்.

இந்நிலையில், திடீரென மணிகண்டனிடம் அவரது முன்னாள் காதலி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. அந்த வற்புறுத்தலுக்கு பிறகு அவரையே திருமணம் செய்ய மணிகண்டன் முடிவெடுத்தாகக் சொல்லப்படும் நிலையில் அதை அறிந்த மணிகண்டன் குடும்பத்தில் பிரச்சனை வந்துருகிறது. இதனால் ஓட்டுநர் மணிகண்டனுக்கு ஏற்பட்ட மன உளைச்சலில் அவர் தூக்கிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே அப்பகுதிக்கு உட்பட்ட காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube