தீ பற்றியெரிய திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி…!

உடல் மேல் தீ வைத்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிகள். 

கேப் ஜெசோப் , ஆம்பிர் பாம்பிர் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில், தங்களது திருமணத்தை வித்தியாசமாக நடத்த வேண்டு என முடிவு செய்தனர். இவர்கள் இருவரும் ஹாலிவுட்டில் ஸ்டன்ட் கலைஞர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

இவர்கள் இருவருக்கும் தேவாலயத்தில் திருமணம் நடைபெற்ற நிலையில், இருவரும், உடல் மேல் தீ வைத்துக் கொண்டு உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னால் சாகசம் புரிந்தனர். இந்த நிகழ்வானது, பயிற்சி பெற்றவர்களால் மேற்கொள்ளப்பட்டது என்றும், யாரும் முயற்சி செய்து பார்க்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment