பேருந்துகளில் விரைவில் அறிமுகமாகும் ஒலிபெருக்கி – அமைச்சர் சிவசங்கர்

பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்க திட்டமிட்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு.

தமிழகத்தில் பேருந்துகளில் அடுத்து வரும் நிறுத்தம் குறித்த அறிவிப்பை ஒலிபெருக்கி மூலம் அறிவிக்க திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் முதற்கட்டமாக 500 மாநகர பேருந்துகளில் ஒலிபெருக்கி அமைக்கப்படும் எனவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பு பேருந்துகளில் கேமரா பொருத்தப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அடுத்து வரும் பஸ் ஸ்டாப்புகள் குறித்து அறிவிக்க ஒலிபெருக்கிகள் அமைக்கப்படவுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்