குணமடைந்த கொரோனா நோயாளிகளுக்கு நீண்ட நாள் நுரையீரல் பாதிப்பு-இங்கிலாந்து ஆய்வு..!

உலகம் முழுவதும் கொரோனா பாதித்து மக்களை வாட்டி வருகிறது. இந்நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நீண்ட நாள் வரை நுரையீரல் பாதிப்பு இருப்பதாக இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக இங்கிலாந்து நாட்டு ஷெப்பீல்டு மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தினர் ஆராய்ச்சி ஒன்று மேற்கொண்டு அதில் கொரோனா பாதித்து குணமடைந்தவர்களுக்கு நுரையீரல் பிரச்சனை இருந்து வருவதாக கண்டுபிடித்துள்ளனர்.

அதில் கொரோனாவால் குணமடைந்து வீடு திரும்பி 3 மாதங்கள், நீண்ட காலம்  ஆனவர்களுக்கு கூட இந்த நுரையீரல் பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பாதிப்பு வழக்கமாக எடுக்கப்படும் சி.டி ஸ்கேன்களில் தெரிவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இதைப்பற்றி ரேடியாலஜி பத்திரிக்கையில் வந்த தகவல்கள் பின்வருமாறு:

கொரோனா தொற்று பாதிக்காமல் வழக்கமாக அதிக மூச்சு திணறல் பாதிப்புகளை சந்தித்தவர்களுக்கும் இது போன்று நுரையீரல் பாதிப்பு இருக்கும் என்றும், இது குறித்து நீண்ட ஆய்வு தேவை என்று கூறியுள்ளது.

கொரோனா பாதித்து குணமடைந்து 3 மாதங்கள், 9 மாதங்களுக்கு பிறகும் எம்.ஆர்.ஐ ஸ்கேன்களில் இவர்களது நுரையீரல் பாதித்த வண்ணம் இருப்பதை காணமுடிகிறது. மேலும், மற்ற மருத்துவ அளவீடுகள் சரியாக இருக்கிறது.

கொரோனாவிலிருந்து சரியான பிறகும் கூட பலர் மூச்சுத்திணறல் பாதிப்பு இருப்பதாக கூறுகின்றனர்.  ஆனால், இந்த பாதிப்பு சாதாரண சி.டி ஸ்கேன்களில் தெரிவதில்லை என்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பெர்கஸ் க்ளீசன் தெரிவித்துள்ளார்.