உள்ளாட்சித் தேர்தல் : 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல்

  • ஊரக உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 
  • உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில்,ஊரக உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 2,98,335 பேர் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் – 2,06,657 கிராம ஊராட்சி தலைவர் – 54,747, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் –32,939,மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் – 3992வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளது. கடந்த 9 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்று மாலை 5 மணியுடன் நடைபெறுகிறது. இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது .டிசம்பர் 19 ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் ஆகும்.அடுத்த ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.