#BREAKING: தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்- தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!

#BREAKING: தமிழகத்தில் 2 கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல்- தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!

தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9-ம் தேதி விடுபட்ட  9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார்.

தமிழக்தில் புதிதாக அமைக்கப்பட்ட வேலூர், நெல்லை, விழுப்புரம், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டமாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் அறிவித்துள்ளார்.

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்கு செலுத்தலாம். உடனடியாக அமலுக்கு வரும் தேர்தல் நடத்தை விதிமுறை அக்டோபர் 16 வரை அமலில் இருக்கும். 9 மாவட்டங்களுக்கும் தனித்தனியாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பார்வையாளராக நியமிக்கப்படுவார். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 5 மணி முதல் 6 மணி வரை வாக்களிக்கலாம்.

ஊரக உள்ளாட்சி தேர்தல் 4 விதமான வாக்குச்சீட்டுகள் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும்,

  • வேட்பு மனு தாக்கல் தொடக்கம் – செப்டம்பர் 15-ஆம் தேதி ,
  • வேட்புமனு தாக்கல் நிறைவு – செப்டம்பர் 22-ஆம் தேதி
  • வேட்புமனு பரிசீலனை –  செப்டம்பர் 23-ஆம் தேதி
  • வேட்புமனு திரும்ப பெறுதல் – செப்டம்பர் 25-ஆம் தேதி
  • அக்டோபர் 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
author avatar
murugan
Join our channel google news Youtube